×

பைக் மீது லாரி மோதி அணுமின் நிலைய ஊழியர் பலி

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் ரக்‌ஷிதா (8). சதுரங்கப்பட்டினம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கிறார். நேற்று முன்தினம் ரமேஷ், தனது பைக்கில், மகளை அழைத்து கொண்டு சதுரங்கப்பட்டினம் புறப்பட்டார். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ரவுண்டானா அருகே சென்றபோது, பின்னால் கோழிகளை ஏற்றி கொண்டு வேகமாக சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் ரமேஷ், சிறுமி ரக்‌ஷிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். சிறுமி ரக்‌ஷிதா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். புகாரின்படிசதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post பைக் மீது லாரி மோதி அணுமின் நிலைய ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Ramesh ,Nallathur village ,Kalpakkam ,power plant.… ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...